×

திருத்துறைப்பூண்டி அருகே பொண்ணு கொண்டான் ஆற்றில் புதிய பாலம் கட்ட அதிகாரி ஆய்வு

திருத்துறைப்பூண்டி, டிச. 11: திருத்துறைப்பூண்டி ஒன்றியம் விஸ்வநாதபுரம் பகுதியில் இருந்து பல்வேறு கிராமங்கள் பயன்பெறும் வகையில் கோட்டூர் ஒன்றியம் திருக்களார் வழியாக மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்கு எதுவாக பொண்ணு கொண்டான் ஆற்றில் புதிய இணைப்பு பாலம் அமைய உள்ள இடத்தை உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், ஒன்றியக்குழுதலைவர் பாஸ்கர், ஒன்றியபொறியாளர்கள் சூரியமூர்த்தி, வெங்கடேன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.புதிய பாலம் அமைய உள்ள இடத்தில் கடந்த ஆண்டு 90 அடி ஆழத்திற்கு மண்ஆய்வு பணியும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய பாலம் அமைந்தால் இரண்டு ஒன்றியங்களையும் இணைக்கிறது. இதனால்100க்கும் மேற்பட்டகிராம மக்களின் கனவு நிறைவேறும் என்பது குறிப்பிட்டதக்கது.


Tags : Ponnu Kondan river ,Thiruthuraipoondi ,
× RELATED திருத்துறைப்பூண்டி அருகே...